திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வரும் 19 மற்றும் மார்ச் முதல் தேதி சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போலியோ என்ற பக்கவாத நோய் வராமல் தடுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இருமுறை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் நோய்க்கான கிருமியை முற்றிலும் ஒழிக்க முடியும் என டாக்டர்கள் நம்புகின்றனர்.
இதற்காக, சொட்டு மருந்து எவ்வளவு தேவை என கணக்கெடுப்பு பணி, கடந்த ஜன., 16ல் துவங்கியது. பழைய மையங்கள் எண்ணிக்கை, குழந்தைகள் பெருக்கம், சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.
சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ரகுபதி கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றன என துறை சார்ந்த கணக்கெடுப்பு முடித்து சுகாதாரத்துறைக்கு அறிக்கை சமர்பித்துள்ளோம். பிப்., 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்கட்டமாகவும், மார்ச் முதல் தேதி (வியாழக்கிழமை) இரண்டாம் கட்டமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; இத்தேதியே உறுதி செய்யப்படும்.
பொது இடங்களில் அமைக்கப்படும் முகாம்களுக்கு, கடந்த ஆண்டை விட, கூடுதலாக சொட்டு மருந்து வழங்கப்படும். வதந்திகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக, கிராம மக்களிடம் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
போலியோ என்ற பக்கவாத நோய் வராமல் தடுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இருமுறை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் நோய்க்கான கிருமியை முற்றிலும் ஒழிக்க முடியும் என டாக்டர்கள் நம்புகின்றனர்.
இதற்காக, சொட்டு மருந்து எவ்வளவு தேவை என கணக்கெடுப்பு பணி, கடந்த ஜன., 16ல் துவங்கியது. பழைய மையங்கள் எண்ணிக்கை, குழந்தைகள் பெருக்கம், சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.
சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ரகுபதி கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றன என துறை சார்ந்த கணக்கெடுப்பு முடித்து சுகாதாரத்துறைக்கு அறிக்கை சமர்பித்துள்ளோம். பிப்., 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்கட்டமாகவும், மார்ச் முதல் தேதி (வியாழக்கிழமை) இரண்டாம் கட்டமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; இத்தேதியே உறுதி செய்யப்படும்.
பொது இடங்களில் அமைக்கப்படும் முகாம்களுக்கு, கடந்த ஆண்டை விட, கூடுதலாக சொட்டு மருந்து வழங்கப்படும். வதந்திகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக, கிராம மக்களிடம் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.