தமிழகத்தில்இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா? என, பெரிய சட்டபோராட்டமே நடந்தது. காளைகளை சாகசக்காட்சி விலங்குகளாக பயன்படுத்த தடை விதித்து, 2011 ஜூலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பிராணிகள் நலவாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது,பொங்கல் திருவிழாவான இன்று, குதூகலத்துடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. ஐகோர்ட் உத்தரவுப்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துள்ளி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் தயாராகிவிட்டனர்.

No comments:
Post a Comment