உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, November 30, 2012

விலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்? கீற்றுவில் - சி.மதிவாணன்

இதுவரை எந்த அரசும் கொண்டுவராத திட்டம் என்று இலவச மடிக் கணிணிகள் திட்டம் பற்றி பலரும் சொல்கிறார்கள். இலவசப் பொருட்களைக் கொடுப்பது அடுத்தத் தேர்தலில் ஜெயிப்பதற்கான வழி என்று இரண்டு திராவிடக் கட்சிகளும் நினைக்கின்றன. அது தவறு என்பதைச் சூடு கண்ட பூனையான கருணாநிதி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் ஜெயலலிதா தெரிந்துகொள்வார்.
ஆனால், இலவசப் பொருட்களை வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்காக என்பது மிகவும் எளிய புரிதல். அதனை ஒரு பொருளாதார நடவடிக்கையாகவும் ஆளுவோர்கள் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு அரசியல் நடவடிக்கையும் கூட. இங்கே நான் சொல்லும் அரசியல் வாக்குப் பெட்டி அரசியல் அல்ல… அது அதனையும் தாண்டி நீண்ட கால நலனுக்கானது. (யாருடன் நலனுக்கானது என்பது வேறு கதை!)

Sunday, October 14, 2012

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே




 THANKS TO 'தலைவர்கள் - முன்னோடிகள்'

தியாகச்சுடர் காமராசர்

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.

Wednesday, February 01, 2012

திவாகரன் கைது ?

திவாகரன் கைது ?:





சமீப காலம் வரை அதிமுகவில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் வாசிக்க.......



Sunday, January 29, 2012

அரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: நாம் தமிழர் கட்சி.


தமிழக அரசின் மருத்துவப் பணிகளில் தனியார் கல்லூரிகளில் படித்துத்தேர்ந்த செவிலியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின்
அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வரும் மாணவியரின் போராட்டம் நியாயமானதே

.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வரும் மகளிரே அரசு
செவிலியர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும்
தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழ்க்
குடும்பங்களின் பிள்ளைகள். ஆனால் தனியார் செவிலியர் கல்லூரிகளில்
படித்துவரும் மாணவிகளில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமின்றி, ஒரளவிற்கு வசதி படைத்த குடும்பப் பின்னணியில் இருந்து படிக்க வந்தவர்களாவர். அவர்கள் படிப்பிற்கே பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து அனுமதி பெற்று படித்து வருபவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அவர்களும் அரசுப் பணிகளுக்கு தேர்வு
செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பது நியாயமற்றதாகும். அதுவும் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக நலவாழ்த்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

Wednesday, December 28, 2011

உண்ணாவிரதத்தை பாதியில் முடித்தார் ஹஸாரே!

மும்பை: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதா குறித்த தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள அன்னா ஹஸாரே, மக்கள் ஆதரவு குறைந்ததாலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலும் இன்றே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 

வலிமையான லோக்பால் மசோதா கோரி நேற்று பிற்பகல் மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் அன்னா ஹஸாரே. 
Related Posts Plugin for WordPress, Blogger...