உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Saturday, August 25, 2012

மின்நுகவோருக்கு கிடைக்க கூடிய உரிமைகள்

Saturday, August 11, 2012

இரண்டாம் நிலைக் காவலர் பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்

இரண்டாம் நிலைக் காவலர் பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
 சென்னை, ஆக. 10: 2012ம் ஆண்டிற்கான 13320 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் தேர்வு மையம் ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இப்போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரையில் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதபட்சத்தில், உரிய அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டிய தேதியினை இணையதளத்தில் அறிந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதல் அவரவருக்கென தெரிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு மையத்திற்கு காலை 8.00 மணிக்கு சென்று கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. 

மேலும் விவிவான தகவல்களுக்கு http://www.tnusrb.tn.gov.in/GR2PC_JW_Firemen_2012/venue_PMT_PET.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.

Wednesday, July 11, 2012

தாம்பத்யம் இயற்கையாக நடக்கிறது என்றால்... குழந்தை பிறப்பும் இயற்கையாகத் தானே நடக்க வேண்டும் ?

தாம்பத்யம் இயற்கையாக நடக்கிறது என்றால்... குழந்தை பிறப்பும் இயற்கையாகத் தானே நடக்க வேண்டும் ?:
பேறுகாலத்தில் மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை ஆசிய நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில், 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில், கர்ப்பிணிப் பெண்களின் மரணம் 254 ஆகவும், தமிழ்நாட்டில் இதன் அளவு 111 ஆகவும் இருந்தது. இந்த விகிதாசாரம், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 25 விழுக்காடு அதிகம் என்கிறது உலக வங்கி.
ஆந்திரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இத்தகைய மரணம் பல மடங்கு குறைவு. இருப்பினும்கூட, தொடர்ந்த முயற்சிகள் காரணமாக 2009-ம் ஆண்டு 79 கர்ப்பிணிகள் மரணம் எனக் குறைந்துள்ளது.

 பேறுகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மருத்துவ வசதிகள் சென்றடையாத கிராமங்களில்தான் அதிகம் என்கிற நம்பிக்கை நம்மிடையே வேரூன்றி இருக்கிறது. ஆனால் அண்மையில், ஐஏஎஸ் அதிகாரியான ஷீலாராணி சுங்கத் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்த கருத்து ஒரு மாற்றுச் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. 

""மகப்பேறு தொடர்பான பாரம்பரிய அறிவை நாம் தக்க வைத்துக்கொள்ளவில்லை. அதை வளர்க்கத் தவறிவிட்டோம். இன்று மருத்துவமனையை நம்பி இருக்கிறோம். பாதுகாப்பான பிள்ளைப்பேறு என்ற கருத்தில், சிசேரியன் மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால்தான் தாய் சேய் நலம் என்ற எண்ணம் உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை?

Friday, July 06, 2012

உங்க பிள்ளைகளை நாமக்கல் பள்ளிகளில் சேர்க்க போறீங்களா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம்.

1150க்கு மேல், 1100க்கு மேல், மெடிக்கல் கட் ஆஃப்பில் இத்தனை, பொறியியல் கட் ஆஃப்பில் இத்தனை என மாணவர்களின் புகைப்படங்களோடு முழுப் பக்கத்தையும் ஆக்ரமித்து பல பள்ளிகள் விளம்பரப் படுத்தி இருந்தன. இவர்களே அனைத்து முக்கிய கல்லூரிகளையும் பிடித்து விடுவார்களே? என்ற கவலை பலருக்கும் வந்திருக்கும்.

ஆஹா பேசாமல் இந்தப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்த்து விட்டால் நல்ல மார்க் எடுத்து நல்ல கல்லூரி கிடைத்து லைப்பில் செட்டில் ஆகி விடுவார்கள் நம் பிள்ளைகள்  என்று கருதும் சராசரி பெற்றோர்களுக்கு சில தகவல்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

இந்த விளம்பரங்களிலேயே ஒரு ஆஃபரையும் நீங்கள் கவனித்து இருக்கலாம். பத்தாம் வகுப்பில் 485/500 க்கு மேல் எடுத்தவர்களுக்கும், இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்தவர்களுக்கும் பள்ளிகட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என்பதே அது. (இந்தளவு மதிப்பெண் எடுத்திருந்தால் அல்லது  இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்திருந்தால் அவர்கள் நியர் பெர்பெக்ட் மார்க் டேக்கிங் மெஷின் ஆகவே இருப்பார்கள். அவர்களை மதிப்பெண் வாங்க வைப்பது எளிது)

Friday, June 29, 2012

குடியரசுத் தலைவரை "சிபிஐ" விசாரிக்கலாமா? கூடாதா?


2 ஜி ஊழல் வந்தப்ப சுப்பிரமணிய சுவாமி சிதம்பரத்துல இந்த வழக்குல சேக்கணும்னு சொன்னாரு. ஆனா சி பி ஐ மத்திய உள்துறை அமைச்சர் மேல வழக்கு பதிய செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லேன்னு சொல்லிடுச்சு.
 வழக்குன்னு வந்தா எல்லோரும் ஒண்ணுதானே..கூப்பிட்டு விசாரிக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு எங்களால முடியாதுன்னு கைய விரிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போ என்ன டவுட்டு னா இப்போ மத்திய நிதித் துறை அமைச்சரா இருக்கிற பிரணாப் முகர்ஜிய எதுக்கு குடியரசுத் தலைவரா உட்கார வைக்கணும்? காங்கிரசுல அப்புறம் வேற ஒரு நல்ல தலைவரே இல்லையா? அதை அவங்களே ஒத்துக்கிறாங்களா?

பிரணாப் முகர்ஜி மட்டும்தான் அங்கே திறமையானவரா இருக்காரா? ஒருவேளை நாளைக்கு அவர் குடியரசுத தலைவர் ஆயிட்டாருனா?!!? ஒரு வேளை நாளைக்கு நிதித் துறையிலே ஏதாவது பிரச்சினை வர்றப்ப அப்பவும் சி பி ஐ அவரை விசாரிக்காம இருக்கிறதுக்கு இப்படி அவரை மட்டுமே குடியரசுத் தலைவரா வைக்க ஆசைப்படு றாங்களோ? ஏன் காங்கிரசுல பிரணாப் தவிர ஒரு ஆள் கூட உருப்படியா இல்லையா?

மதச்சார்பற்ற கட்சி என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஏன் ஒரு சிறுபான்மையினரை குடியரசுத்தலைவராக, ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க கூடாது! இது போன்று எத்தனையோ கேள்விகள் இருக்கின்றது.? 

எனது நண்பன் ஒருவனிடம் (காங்கிரஸ் கட்சிக்காரன்) னிடம் இது பற்றி கேட்டதற்கு அவன் சொன்ன பதில், " அதுல அமௌன்ட் ரொம்ப அடிக்க முடியாதுப் பா? 
 
எது எப்படியோ எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்?!!!? நாம என்னத்த சொல்ல? "

Thursday, May 17, 2012

தகவல் அறியும் சட்டத்தின் முலம் கோவை போக்குவரத்து கழகத்தில் எனது நண்பர் கேட்ட கேள்வியும் பதிலும்

g.Njrha;fhe;jp>
jkpoh; ew;gzp kd;wk;>
35.uh[htPjp>
nfhsg;gY}h; mQ;ry;
Nfhgp tl;lk;
<NuhL khtl;lk; 638456

ngWeH
nghJ jfty; mYtyh;>
jkpo;ehL muR Nghf;Ftuj;Jf;fofk;>(Nfhitypkpl;)
37>Nkl;Lg;ghisak; NuhL>
Nfhit

Monday, December 26, 2011

உலவு பயன்படுத்துவது எப்படி என செல்லுங்கள்

http://ulavu.com/   உலவு  பயன்படுத்துவது எப்படி என செல்லுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...