அதில் பல்வேறு வகையான சேனல்கள் இடம் பெறும் என்ற அறிவிப்போடு மாதம் 70 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் அறிவித்தது. அத்துடன் இல்லாமல் இதனை மீறி கூடுதல் கட்ட ணம் வசூலிப்பவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தது.அரசு அறிவித்த நாளில் இருந்தே 70 ரூபாய் கட்டணம் என்பது இதுவரை எங்குமே நடைமுறையில் இல்லை.
ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்தி வந்தவர்கள், அவர்கள் வசூலித்த தொகையான ரூ. 100 லிருந்து 200 ரூபாய் வரை பல்வேறு இடங்களில் இன்றும் வசூலித்து வருகின்றனர். இதனை கட் டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.சில தனியார் தொலைக்காட்சிகளின் தொடர்களில் மயங்கிப்போன மக்கள், குறிப்பாக பெண்கள் அந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அரசு டிவி யில் இடம்பெற வில்லை என்பதால் மிகுந்த சலிப்படைந்தனர்.
இதனால் கேபிள் டிவி இயக்குநர்கள், அரசு டிவியில் நீங்கள் விரும்பும் சேனல் வராது; நாங்கள் நேரடி யாக பெற்று வழங்குகிறோம். எனவே நாங்கள் கேட்கும் தொகையை நீங்கள் தரவேண்டும் என வற்புறுத்தி பெற்றுச் செல்கின்றனர்.
இதனால் ஜெயலலிதாஅரசு அறிவித்த கேபிள் டிவிஎவ்வித மரியாதையும் இல்லாமல் போய்விட்டது.சில குறிப்பிட்ட கேபிள் டி.வி. இயக்கு நர்கள், அரசு தொலைக்காட்சியில் தங் களை இணைத்துக்கொள்ளாமல் தனியா கவே இயங்கி வருகின்றனர். அரசுத் தொலைக்காட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட ஆப்ரேட்டர் களோ அரசுக்கு கட்டுப்படாமல் மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அரசு, கேபிள் டி.வி.யை தனது உடமையாக்கிய பிறகு ஒளிபரப்பில் தரம் என்பது குறைந் திருக்கிறது. செயற்கையாகவும் ஒளிபரப் பில் குளறுபடிகள் செய்யப்படுகிறது. போதாக்குறைக்கு தற்போதுள்ள மின் வெட்டின் காரணமாகவும் பல மணிநேரம் தொலைக்காட்சிகள் இயங்குவதில்லை. ஆனால் மாதம் தொடங்கியதும் முதலில் வீட்டு வாசலில் கதவைத் தட்டுவது கேபிள் டி.வி.க்கு பணம் வசூலிப்பவர் களாகத்தான் உள்ளார்கள். அதிக கட்டணம்ஒளிபரப்பின் பயனை முழுமையாக நுகராத மக்கள் வேறு வழியின்றி முணு முணுத்துக்கொண்டே பணத்தைக் கட்டி வருகின்றனர். பொதுவாக ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் கேளிக் கைக்காக 5 ரூபாய் வீதம் மாதம் 150 ரூபாய் வழங்குவது என்பது மக்களுக்கு பெரும் சுமை அல்ல.
ஆனால் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்பட்டதால் ஏக போகமாக லாபத்தை அனுபவித்து வந்த நிலைக்கு மாறாக ஒரு பகுதி வருவாய் அரசின் கருவூலத்திற்கு திருப்பிவிடப் பட்டுள்ளது என்பது நல்ல அம்சமாகும். எனவே அரசு கேபிள் டி.வி. இயக்கு நர்களை அழைத்துப்பேசி அரசின் கட் டுப்பாட்டில் வராத தனியார் தொலைக் காட்சிகளையும் அதற்குள் இணைத்து இரண்டு பக்கமும் பாதிப்பில்லாத வகையில் ஒரு கட்டணத்தை வரை யறுத்து அறிவித்து, அதனை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்து, அதனை மட்டுமே மக்களிடம் வசூல் செய்கின்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். சில உபயோகிப்பாளர்கள் எங்க ளுக்கு அரசு வழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டும் போதும். 70 ரூபாய் தருகிறோம் என்றால் கேபிள் ஆப்ரேட்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வலுக்கட்டாயமாக அரசின் அறிவிப்புக்கு மாறாக கூடுதல் பணத் தை பறித்துச் செல்கின்றனர். எனவே அரசு ஆணையை மதிக்காத கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை,
அரசு அறிவித்துள்ள கேபிள் டிவி நிர்வாகத்தில் உள்ள ஒழுங்கீனமான நடவடிக்கைகள் முன்பிருந்த சுமங்கலி கேபிள் நிர்வாகமே பரவாயில்லை என்றாக்கிவிட்டது.
ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தனியார் தொலைக்காட்சிகளை எடுத்து நடத்தி வந்தனர். உள்ளூர் தொலைக் காட்சிகளையும் நடத்தி வந்தனர்.
தற்போ தைய அரசின் அறிவிப்பின் மூலமாக எம்எஸ்ஓ என்று சொல்லப்படுகின்ற தலைமைக் கட்டுப்பாட்டு அறைகளைஎல்லா மாவட்டங்களிலும்அதிமுகவினர்தான் கைப்பற்றி நடத்துகின்றனர்.
அரசு கேபிள் டிவியை நிர்வகிப்பவர் களும் அதிமுக நிர்வாகிகளாகவே உள்ள னர். இந்த லட்சணத்தில் இவர்களைக் கண்காணிப்பதற்கென்றும் அரசின் சார்பில் தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு என்ன வேலை என்று அவர்களுக்கே தெரிய வில்லை.
அவர்களை உள்ளூரெமெஸ் ஓக்கள் அறையில் நுழையக்கூட விடுவதில்லையாம்.அதன் உள்ளே எப்படி இருக்கும் என்று கூட தெரியாது என ஒரு மாவட்ட அரசு கேபிள் தனி வட்டாட்சியர் கூறிவருகிறார்.
அதேபோல உள்ளூர் தொலைக் காட்சிகளை ஏலம் விட்டதில் பல லட்சம் கட்டுவதாக ஏலம் எடுத்தவர்களுக்கு அரசு இன்னமும் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த பல இடங்களில் உரிமம் முறைப்ப்படி வழங்கவில்லையாம்.அதிமுகவினர்அல்லாதவர்கள் உரிமம் இருந்தாளும் அவர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட மறுக்கப்படுகிறது.இதனால் ஏலம் எடுத்தவர்கள் மாத ஒப்பந்த தொகையை செலுத்த மறுத்துவருகின்றனராம்.அதில் தனி வட்டாட்சியரும்,மாவட்ட நிருவாகமும் தலையைப்பிய்த்துக்கொண்டு அலைகின்றனர்.
அ.திமுக வினர் மட்டும் உள்ளூர் தொலைக்காட்சிகளை ஏலமும்-உரிமமும் இல்லாமல் அரசுக்கு பணமும் செலுத்தாமல் நடத்தி லாபம் சம்பாதித்துவருகின்றனர்..இதனால் தமிழ நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுவருகிறது.
மக்கள் விரும்பும் சானல்களை க்காட்டாததுடன் தற்போது காட்டிவரும் சானல்களையும் மாற்றி-மாற்றி காட்டுவதால் மக்கள் சலிப்பின் எல்லைக்கே சென்று முந்தைய முறையில் சன் குழுமம் கைக்கே கேபிள் டி.வி.போகாதா என்று ஏங்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
http://suransukumaran.blogspot.in/2012/03/blog-post_19.html
