திருப்பூர் :ஜெனரேட்டர் மானியத்தை உயர்த்தியுள்ளதை வரவேற்கும் திருப்பூர் பனியன் தொழில்துறையினர்,
மானிய விலையில் டீசல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மின்வெட்டு காரணமாக, திருப்பூர் பனியன் தொழில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. வார மின்விடுமுறை
நடைமுறைக்கு வந்த பிறகும், மின்வெட்டு பிரச்னை சிறிதும் குறை யாதது தொழில்துறையினரை அதிருப்தி
அடையச் செய்துள்ளது. சாதாரண நாட்களில், வாரத்துக்கு 72 மணி நேரம் உற்பத்தி நடந்தது. வார மின்விடுமுறை,
தினமும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக ஏற்படும் மின்வெட்டால் 50 சதவீத உற்பத்தி கூட நடப்பதில்லை.
மின்வெட்டு பிரச்னை தற்போதைக்கு குறையாது என்ற நிலை உருவாகியுள்ளதால், தமிழக அரசு
ஜெனரேட்டர்களுக்கான மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. அதன்படி, 320 கே.வி.ஏ., வரையிலான ஜெனரேட்டர்
வாங்க, ஐந்து லட்சம் ரூபாய் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது. மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்துள்ள
தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர் மானியத்துக்கு விண்ணப்பித்து பெறலாம்.
பெரும்பாலான பனியன் கம்பெனிகளில் ஜெனரேட்டர் இருந்தாலும், டீசல் விலை உயர்வாக இருப்பதால்
பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு 15 முதல் 20 லிட்டர் டீசல் தேவைப்படுவதால்,
மின்வெட்டு பிரச்னை தீரும் வரை, டீசலுக்கு மானியம் வழங்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி
உள்ளனர்.
மானிய விலையில் டீசல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மின்வெட்டு காரணமாக, திருப்பூர் பனியன் தொழில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. வார மின்விடுமுறை
நடைமுறைக்கு வந்த பிறகும், மின்வெட்டு பிரச்னை சிறிதும் குறை யாதது தொழில்துறையினரை அதிருப்தி
அடையச் செய்துள்ளது. சாதாரண நாட்களில், வாரத்துக்கு 72 மணி நேரம் உற்பத்தி நடந்தது. வார மின்விடுமுறை,
தினமும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக ஏற்படும் மின்வெட்டால் 50 சதவீத உற்பத்தி கூட நடப்பதில்லை.
மின்வெட்டு பிரச்னை தற்போதைக்கு குறையாது என்ற நிலை உருவாகியுள்ளதால், தமிழக அரசு
ஜெனரேட்டர்களுக்கான மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. அதன்படி, 320 கே.வி.ஏ., வரையிலான ஜெனரேட்டர்
வாங்க, ஐந்து லட்சம் ரூபாய் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது. மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்துள்ள
தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர் மானியத்துக்கு விண்ணப்பித்து பெறலாம்.
பெரும்பாலான பனியன் கம்பெனிகளில் ஜெனரேட்டர் இருந்தாலும், டீசல் விலை உயர்வாக இருப்பதால்
பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு 15 முதல் 20 லிட்டர் டீசல் தேவைப்படுவதால்,
மின்வெட்டு பிரச்னை தீரும் வரை, டீசலுக்கு மானியம் வழங்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி
உள்ளனர்.