திருப்பூர் :"வரும் ஏப்., 1 முதல், திருப்பூர் பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையா மாற்றப்படுகிறது,' என, தெற்கு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெரிய கடை வீதி, வணிக நிறுவனங்கள், அரிசி கடைகள், கோவில், பள்ளிவாசல், பள்ளிகள் அதிகளவு உள்ள பகுதியாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பெரிய கடை வீதி மற்றும் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இந்நடைமுறை ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.
அதன் அடிப்படையில், காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெருமாள் கோவில் வீதி வழியாக குமரன் ரோட்டுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நேராக சென்று, தாராபுரம் ரோடு வழியாக வர வேண்டும்.
வளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து நேராக காங்கயம் ரோடு செல்லக்கூடாது; குமரன் ரோட்டில் இருந்து அரிசி கடை வீதி வழிய õக காங்கயம் ரோடு செல்லக்கூடாது. ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து கே.எஸ்.சி., பள்ளி வழியாக தாராபுரம் ரோடு செல்லக்கூடாது. இதன் அடிப்படையில், அரிசி கடை வீதி, பெரியகடை வீதி, டூம்லைட் மைதானம் வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி ஆகியவை ஒரு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்படுகிறது.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், "ஒரு வழிப்பாதை திட்டம் ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும். இதுகுறித்து அனைத்து ரோடுகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மீறினால் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்,' என்றனர்.
திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெரிய கடை வீதி, வணிக நிறுவனங்கள், அரிசி கடைகள், கோவில், பள்ளிவாசல், பள்ளிகள் அதிகளவு உள்ள பகுதியாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பெரிய கடை வீதி மற்றும் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இந்நடைமுறை ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.
அதன் அடிப்படையில், காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெருமாள் கோவில் வீதி வழியாக குமரன் ரோட்டுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நேராக சென்று, தாராபுரம் ரோடு வழியாக வர வேண்டும்.
வளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து நேராக காங்கயம் ரோடு செல்லக்கூடாது; குமரன் ரோட்டில் இருந்து அரிசி கடை வீதி வழிய õக காங்கயம் ரோடு செல்லக்கூடாது. ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து கே.எஸ்.சி., பள்ளி வழியாக தாராபுரம் ரோடு செல்லக்கூடாது. இதன் அடிப்படையில், அரிசி கடை வீதி, பெரியகடை வீதி, டூம்லைட் மைதானம் வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி ஆகியவை ஒரு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்படுகிறது.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், "ஒரு வழிப்பாதை திட்டம் ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும். இதுகுறித்து அனைத்து ரோடுகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மீறினால் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்,' என்றனர்.