திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (மார்ச்-31) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க திருப்பூர் மாவட்ட அரசுத் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் எம்.மதிவாணன் விடுத்துள்ள செய்தி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் பிரிவு) சார்பில் மாவட்ட அளவில் அரசு பணியாளர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (மார்ச் 31) நடத்தப்பட உள்ளது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியாக நடத்தப்பட உள்ளன.அதன்படி, 30 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 100மீ, 3000மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 40 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 100மீ, 1500மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 50மீ, 3000மீ ஓட்டம், நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 200மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.அதேபோல, 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு 100மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 100மீ, 3000மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 50மீ, 1500மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட 200மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இதில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0421 -2244899 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.