
பல்லடம், மே. 14-
பல்லடத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). திருப்பூர் மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை.
நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை கவிதா பல்வேறு இடங்களில் குணசேகரனை தேடினர். பலன் இல்லை.
இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையம் எதிரேயுள்ள மீன் வளர்ச்சி கழக விற்பனை அங்காடி அருகே மது குடித்து ஒருவர் இறந்து கிடப்பதாக பல்லடம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது இறந்து கிடந்தவர் குணசேகரன் என்பதும், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததும் தெரியவந்தது.