திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் வழியாக, தமிழ் புத்தாண்டு முதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நடக்கும் பராமரிப்பு பணியை, மேயர் விசாலாட்சி, கமிஷனர் ஜெயலட்சுமி, துணைமேயர் குணசேகரன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.மேயர் கூறியதாவது:பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் புதுப்பிக்கும் பணி, 3.60 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. வடக்கு பகுதியில் பணிகள் நிறைவடைந்துள்ளதால், வரும் தமிழ் புத்தாண்டு முதல் அவ்வழியாக பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வடக்கு பகுதி கழிப்பிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள புல் தரையை விரைவில் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகில் கட்டப்பட்டுள்ள, வார்டு அலுவலக கட்டுமான பணியையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், இளம்பொறியாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தன