தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன?
'மாங்கலயம் தந்துனானே' என தொடங்கும் இம்மந்திரத்தில்,
''சோமஹ ப்ரதமோ விவிதே
கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ
அக்னிஸ்டே பதிதுரியஸ்தே
மனுஷ்ய ஜாஹ''
எனும் வரிகளின் விளக்கம்,
''நீ(மணமகள்) முதலில்
சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய்,
பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான்,
பின்பு அக்கினி உன்னை அடைந்தான்.
இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.''
இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தாள் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.
Related Posts: ,
