2 ஜி ஊழல் வந்தப்ப சுப்பிரமணிய சுவாமி சிதம்பரத்துல இந்த வழக்குல சேக்கணும்னு சொன்னாரு. ஆனா சி பி ஐ மத்திய உள்துறை அமைச்சர் மேல வழக்கு பதிய செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லேன்னு சொல்லிடுச்சு.
வழக்குன்னு வந்தா எல்லோரும் ஒண்ணுதானே..கூப்பிட்டு விசாரிக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு எங்களால முடியாதுன்னு கைய விரிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போ என்ன டவுட்டு னா இப்போ மத்திய நிதித் துறை அமைச்சரா இருக்கிற பிரணாப் முகர்ஜிய எதுக்கு குடியரசுத் தலைவரா உட்கார வைக்கணும்? காங்கிரசுல அப்புறம் வேற ஒரு நல்ல தலைவரே இல்லையா? அதை அவங்களே ஒத்துக்கிறாங்களா?பிரணாப் முகர்ஜி மட்டும்தான் அங்கே திறமையானவரா இருக்காரா? ஒருவேளை நாளைக்கு அவர் குடியரசுத தலைவர் ஆயிட்டாருனா?!!? ஒரு வேளை நாளைக்கு நிதித் துறையிலே ஏதாவது பிரச்சினை வர்றப்ப அப்பவும் சி பி ஐ அவரை விசாரிக்காம இருக்கிறதுக்கு இப்படி அவரை மட்டுமே குடியரசுத் தலைவரா வைக்க ஆசைப்படு றாங்களோ? ஏன் காங்கிரசுல பிரணாப் தவிர ஒரு ஆள் கூட உருப்படியா இல்லையா?
மதச்சார்பற்ற கட்சி என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஏன் ஒரு சிறுபான்மையினரை குடியரசுத்தலைவராக, ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க கூடாது! இது போன்று எத்தனையோ கேள்விகள் இருக்கின்றது.?
எனது நண்பன் ஒருவனிடம் (காங்கிரஸ் கட்சிக்காரன்) னிடம் இது பற்றி கேட்டதற்கு அவன் சொன்ன பதில், " அதுல அமௌன்ட் ரொம்ப அடிக்க முடியாதுப் பா?
எது எப்படியோ எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்?!!!? நாம என்னத்த சொல்ல? "
