சென்னை, டிச.31 - சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டை எண் முக்கியமாக கருதப்படுவதால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 77 லட்சம் பேர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துள்ளனர். இது 70 சதவீதமும், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை எண் வழங்கப்பட்டுள்ளது. இது 80.99 சதவீதமாகும்.
மற்ற மாவட்டங்களை விட சென்னை மாவட்டத்தில்தான் புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவரை 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். இது 54 சதவீதமாகும்.
சென்னை, டிச.31 - சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டை எண் முக்கியமாக கருதப்படுவதால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 77 லட்சம் பேர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துள்ளனர். இது 70 சதவீதமும், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை எண் வழங்கப்பட்டுள்ளது. இது 80.99 சதவீதமாகும்.
மற்ற மாவட்டங்களை விட சென்னை மாவட்டத்தில்தான் புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவரை 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். இது 54 சதவீதமாகும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ள?ர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிப்பு.



